இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...? 02

ஓடி பிடித்து
விளையாடுகையில்
இடுப்பில் இருந்த
காற்சட்டை
நழுவி விழ கூ கூ கூ
என்ற நண்பனிடம் -கெஞ்சி
கேட்ட  வரம் டேய் .
யாரிடமும் சொல்லி விடாதே
சொல்லி விடாதே என்ற
கெஞ்சல் தான் ....!!!

அதற்காக அவன் என்னிடம்
கேட்கும் லஞ்சம் என் உயிர்
விளையாட்டு பொருளை
விரும்பாமல் கொடுத்தேன்
வெட்கத்துக்காக ....!!!

கொட்டும் மழையில் நம்மை
மறந்து அம்மணமாய்
குளிப்போம் -துள்ளி துள்ளி
அப்போ எங்கே போனது
வெட்கம் ....? -ஆனால்
போய் விட்டது  என் உயிர்
விளையாட்டு பொருள் ...!!!
இன்றும் சிரிக்கிறேன் அதை
நினைத்து ....!!!
இவன்
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக