இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 அக்டோபர், 2013

திருக்குறளும் காதல் கவிதையும்..02

பண்டு அறியேன் கூற்றுஎன் பதனை இனி அறிந்தேன் 
பெண்தகையால் பேரமர்க் கட்டு. (1083)

கண்ணழகியே.....!!!
கட்டழகியே......!!! 
உன் கண் போர்வாள் 
உன் பார்வை பாசக்கயிறு ...
எமனை கண்டறியேன் 
கேட்டறிந்தேன் ...!!!
இப்போ கண்டுவிட்டேன் 
கண்ணே - உன் கண் 
பட்ட பார்வையில் ....!!!