இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 பிப்ரவரி, 2014

அன்பின் எனது கவிதை ரசிகர்களே

அன்பின் எனது கவிதை ரசிகர்களே 
-----------------------------------

நீங்கள் என் மீது காட்டும் அளவற்ற அன்புக்கும் 
ஊக்கிவிர்புக்கும் என்னிடம் கைமாறாய் எதுவும் 
தருவதற்கு என் கவிதையை தவிர ஏதும் இல்லை 

நான் ஒரு முழுநேர கவிஞர் இல்லை .என் வேலைநேரம் போக மீதி நேரத்தில் மிக ரசனையுடன் கவிதை எழுதுகிறேன் .கவிதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே ..எனக்கு எந்த கவலையோ தாக்கமோ இல்லை .

பலர் என்னிடம் மனவேதனையுடன் நான் அதிககவலைப்படுவதாக நினைத்து மனஆறுதல் சொல்லுகிறார்கள் .இதுவே என் கவிதைக்கு கிடைத்த பெரும் பரிசு .

அண்மைக்காலம் எனது ரசிகர்கள் காட்டும் அன்பும் என்னோடு கவிதை எழுதும் சக நண்பர்களும் 
என்னை மெய் சிலுக்க வைக்கிறது . எனக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறதா ..? என்று வியக்க வைக்கிறது . 

எனது இலட்சக்கணக்கான ரசிகர்களில் சிலர் எனக்கு தனிப்பட்ட மடலில் கூறிய கருத்துக்கள் என்னை மெய் சிலுக்க வைக்கிறது 

1) தமிழ் நாட்டில் வேலூர் என்ற இடத்தின் ரசிகர் ஒருவர் தான் வேலை முடிந்து வந்ததும் .மனைவி 
பிள்ளைகள் இருவருடன் முகநூலில் கவிதை வாசித்த பின் தான் இரவு உணவு அருந்துவோம் 
என்று எனது தனிப்பட்ட தொலைபேசியில் உரையாடியமை கண்ணீர் வரசெய்து விட்டது .

2) ஒரு சில நாட்களின் முன் டென்மார்க்கை சேர்ந்த 
ரசிகை ஒருவர் என்னை பார்ப்பதற்காகவே ஸ்ரீலங்கா வந்து என்னை யாழ்ப்பாணத்தில் சந்தித்து .100000(ஒருலட்சம் ) ரூபா பெறுமதியான மடிக்கணணியை (லப் டாப் ) அன்பளிப்பாக தந்து 
டென்மார்க்கில் ஒரு ரசிகர் கூட்டமே எனக்கு உருவாக்கி இருக்கிறார் .என்று கூறியதும் என்னை நேரில் சந்தித்ததும் .எனக்கு கிடைத்த பெரும் பரிசு என்றே நினைக்கிறேன் 

3) நிறைய ரசிகர்களின் வாழ்த்துக்களும் ஆவல்களும் என்னை மெய் சிலுக்க வைத்து கொண்டே இருக்கிறது .

அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .இதை வார்த்தையால் அளவிட முடியாத 
விடயம் எப்படி நன்றி கூறுவது ...? 
என்னை ஊக்கி விற்கும் நல்ல உள்ளங்களுக்கும் 
சக எழுத்தாளருக்கும் . நான் எழுதும் தமிழ் தளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 

என்றும் உங்கள் 
கே இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக