இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 பிப்ரவரி, 2014

உனக்காக எழுதும் வரிகள்

உன்னை நினைத்து எழுதும்
கவிதை வரிகள் உன் நலினத்தை
காட்டுகிறது அன்பே ....!!!

எழுத்தில் சுழி போடும்
போது உன் நெத்தியோரம்
வந்துவிழும் சுருள் முடி
நலினமாய் தெரிகிறது ....!!!

எழுத்துக்களை வளைத்து
வளைத்து எழுதும் போது
உன் நலின நடை  வந்து
போகிறது .....!!!

எழுத்து பிழை வரும் போது
அதை அழிக்க முற்படும் போது
நீ கெஞ்சி கேட்கும் வார்த்த்தைகள்
வருகிறது ....!!!

உனக்காக எழுதும் வரிகள்
அடுத்து என்ன என்று -நான்
ஏங்குவதை விட -என் பேனா
ஏங்குகிறது .....!!!

எழுத்து முடிந்தவுடன்
வேதனைப்படுகிறது -பேனா
இதைவிட அழகாக
எழுதியிருக்கலாமே  என்று ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக