இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஜூலை, 2015

உலகில் ஏதும் உண்டோ ...?

அம்மா....!!!

நடை பழகும்போது ...
கை கொடுத்தாயம்மா .....
இடறி விழும்போது ...
இடுப்பில் சுமந்தாயம்மா ....
பள்ளி செல்லும் போது ....
கால் வலிக்க நடந்தாயம்மா ....
புத்தகப்பையுடன் என்னையும் ...
தோள் சுமந்தாயம்மா ....!!!

அம்மா ....!!!

கருவறை சுமைமட்டும் ....
நீ சுமக்கவில்லை ....
உன் உடலின் அத்தனை ....
உறுப்புகளிலும் என்னை ....
சுமந்தாய் ...........!!!

அம்மா .....!!!

மடியில் வைத்து பாடம் ....
தந்தாய் இப்போ நான்....
பலபடிகள் தாண்டி பலநாடு ....
சென்றேன் - புரிந்தேன் ...
அன்னையின் மடியைவிட ....
எந்த ஒரு பல்கலை கழகமும் ...
இல்லவே இல்லை ......!!!

அம்மா ....!!!

கவிதை எழுத முனைவேன் ....
வார்த்தைகள் வந்து தடுக்கும் ....
அம்மா என்றவுடன் அத்துணை ...
சிந்தனையும் வெற்றிடமாய் ....
மாறிவிடும் - தாயே உம்மை ...
எதனோடு ஒப்பிடுவது ...
தாயை தாண்டி ஒப்பிட ....
உலகில் ஏதும் உண்டோ ...?
இப்போதும் பாரம்மா ...
ஏதோ உளறிக்கொண்டே ...
இருகின்றேன் .....!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக