இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

என்னை உணர்பவன் செல்வந்தன்

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........என்னை உணர்பவன் செல்வந்தன்  .......

^^^^^^^^^^^^^^^^^

நான் உங்கள் நீர் ....
பேசுகிறேன் .....
உலகின் தோற்றமும் ....
உலக முடிவும் ....
நானாக இருக்கிறேன் ....!!!

என்
உடன் பிறப்புகளே ...
நிலம் காற்று நெருப்பு ஆகாயம் .....
என் குழந்தைகளே ....
நதி, அருவி,குளம் ,குட்டை ...
கிணறு ,ஓடை ,பள்ளம் ....!!!

நான்
மகிழ்ச்சியாய் இருந்தால் ...
பருவ மழை ....
கோபமாய் இருந்தால் ....
சூறாவளி.....
வெறுப்படைந்தால் ...
சுனாமி ...................!!!

என்
சகோதரி நிலம் போல் ....
நானும் ஒரு தனி உலகம் ....
அவள் மனிதன் ,மிருகம் ...
மரங்கள் .பறவை .ஊர்வன ...
என்பவற்றை படைத்து ...
காக்கிறாள் - நானும் ...
நீருலகத்தை படைத்து ....
காக்கிறேன் .....................!!!

என்னை பற்றி ....
கொஞ்சம் சொல்கிறேன் ...
அருவிதான் என் கூந்தல் ...
ஊற்றுதான் என் ஆத்மா ....
நதி என் வாழ்க்கை நெறி ....
கடல் என் கருப்பை .....
நீராவி தற்காலிக மரணம் ....!!!

நீர் பறவைகளுக்கு - நான்
விளையாட்டு மைதானம் ....
மனிதனுக்கு வாழ்வாதாரம் ....
மிருகங்களுக்கு தாக சாந்தி ....!!!

மனிதா ....
வாழ்வாதாரமே நான்தான் ....
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ...
கோபப்படுதுகிறாய்.....
என் வன்மை குணமே ....
பனிகட்டி அதனோடு சீண்டாதே ...
என் சகோதரி நிலத்தை ....
கோபப்படுத்தாதே.- புவியை ...
வெப்பமாக்காதே..........!!!

நான் உருகினால் ...
நீங்கள் அனைவரும் இல்லை ....
நான் இரக்கமானவள்
என்னை உருக்கி விடாதீர் ......
உலகின் பெரும் செல்வம் ....
தண்ணீர் என்பதை எவன் ....
உணர்கிறானோ அவனே ....
செல்வந்தன் இது உறுதி ....!!!

================
கடல் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
=================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக