இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 மே, 2014

ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!

அன்பான குடும்பத்தை
ஆட்டிவைக்கும் மதுமாதுவே
இன்பம் என்னும் போதைக்குள்
ஈன்ற குழந்தையும் மதிக்காலம்
துன்பத்தையே தினமும்
கொடுக்கும் - மது பேதையே...!!!

மனக்கவலையை போக்க
மதுஅருந்துகிறேன் -என்போரே
நீ ஒருவன் மது அருந்தியதால்
குடும்பமே மனக்கவலை ஆனதை
ஏன் மறந்தாய் ....?

பெற்றோரை வெறுத்து
உற்றாரை வெறுத்து
உடன் பிறப்புகளை வெறுத்து
மதுவையே கட்டி பிடித்து
வாழும் மாந்தரே -மந்தைகளே
ஆறறிவை இழந்து போகிறாய்.....!!!

மதுவினை ஒழிப்போம்....!!!
இது சட்டத்தால் சாதிக்க முடியாது
மன சட்டத்தால் தான் சாதிக்கலாம்
பூரண மதுவிலக்கு போராட்டத்தால்
வரமுடியாது ...!!! -மனசாட்சியுடன்
போராடினால் தான் வரமுடியும் ....!!!


சமுதாய கவிதை
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக