இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

கவிதையும் வினாவும் விடை தாருங்கள்-02

அவர் வரும்போது .....
கையாட்கள் பலர் .....
கைகூப்புவோர் பலர் ....
செருக்கோடு சிரித்தும் ....
சிரிக்காததுமாய் செல்வார் ....!!!

அடுத்த வேளைக்கு....
உணவுக்காய் அங்கலாக்கும் ....
இவன் வரும்போது ....
போ போ தூரப்போ என்று ....
துரத்தும் கைகள் அதிகம் ....
வறுமையால் பணிவுடன் ...
ஒதுங்குவான் ....!!!

இருவரும் ஒருநாள் ....
ஒரே இடத்தில் சந்திப்பார் ....
கை கூப்பியவரும் துணையில்லை ....
கை விரட்டியவனும் துணையில்லை .....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக