இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 ஜூன், 2014

உனக்கு நண்பனாய் வருவேன்

காதல் என்றால் அருகில் 
இருந்தால் தான் சுகம் ....!!!
கணவன் என்றால் 
துணையாக இருந்தால் 
தான் சுகம் .....!!!

என் அருமை நண்பா ...
உன்னை நினைக்கும் 
போது ஒருவகை சுகம் ..
உன்னை பார்க்கும் போது 
இன்னுமொரு சுகம் ....!!!

எந்த வித எதிர்பார்ப்பும் 
இல்லாமல் வந்தாய் ...
இந்த நிமிடம் வரை எந்த 
குறையும் இல்லாமல் அன்பை 
பொழிகிறாய் .....!!!

படித்தால் 
தான் பெற்றோரிடம் 
மதிப்பு .........!!!
உழைத்தால் தான் 
மனைவியிடம் மதிப்பு ...!!!

எல்லாவற்றையும் இழந்து 
வெறுங்கையுடன் வந்தாலும் 
புறங்கை காட்டாமல் 
அகம் மகிழ கரம் நீட்டும் 
என் உயிர் நட்பே ....!!!

நான் 
மறுபடியும் பிறக்க வேண்டும் ....
அதுவும் உனக்கு நண்பனாய் 
வருவேன் என்றால் மட்டும் 
இல்லை எனக்கு வேண்டாம் 
மறு பிறப்பு .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக