இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 அக்டோபர், 2014

நான் கண்ட இறைவன் ....!!!

என்னை
யாரென்று தெரியாமல் ...
உடல் வலியோ உள வலியோ ..
வரும் போது எனக்கு உதவிய ...
மனிதம் ------------- !!!
+
நான் கண்ட இறைவன் 

@@@

மனிதன் வேறு
மனிதம் வேறு
பிறருக்காக தன்னை
அர்பணித்து அறநெறியோடு
வாழும் மனிதன் -மனிதம்
அந்த மனிதம் ...........!!!
+
நான் கண்ட இறைவன் 

@@@

தன்னிடம் கொடுப்பதற்கு
ஒன்றும் இல்லாத போதும்
ஒரு சில நொடி நான்
எதைஎண்டாலும் கொடுக்க
வேண்டும் என்று துடிக்கும்
இதயத்துக்குள் இறைவன்
இருக்கிறான் - அவன் .....!!!
+
நான் கண்ட இறைவன் 

@@@

பிற
பொருளுக்கு சொத்துக்கு ....
ஆசைப்படாமல் -பிறர் சொத்தை ....
பாதுகாத்து கொடுக்கும் மனித ....
உள்ளம் மனிதருள் இறைவன் ....!!!
+
நான் கண்ட இறைவன் 

@@@

குழந்தையின் சிரிப்பிலும்
முதுமையின் ஏக்கத்திலும்
இறைவன் இருக்கிறான்
இதை உணர்ந்து முதுமை
மனிதன் எல்லோரையும்
தன் பெற்றோர் என்று அன்பு
காட்டுபவன் ....!!!
+
நான் கண்ட இறைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக