இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 அக்டோபர், 2014

காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

ஏய் கண்விழியே ...
கண்டவுடன் காதல் கொண்டாய் ...
வரப்போகும் துன்பத்தை ....
அறியாமல் மயங்கினாய் .....
விரும்பினாய் .....!!!

காணவில்லை உயிரை 
என்பதால் கலங்கி நிற்கிறாய் 
கண் விழியே  -அத்தனைக்கும் 
காரணம் நீதானே கண்ணே,,,,,!!!

திருக்குறள் : 1172
+
கண்விதுப்பழிதல்
+
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் 
பைதல் உழப்பது எவன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 92

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக