இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 அக்டோபர், 2014

காதல் கண்களை தவிர ....!!!

காதல் கண்களை தவிர ....!!!

என்னவன்
வராததால் என் கண்கள் ..
தூங்கவே  இல்லை ...
வந்தபின் அவனையே ..
பார்க்கப்போகும் கண்கள் ..
தூங்க போவதுமில்லை ...!!!

அவன் ...!!!
இருந்தாலும் துன்பம் ...
இல்லாவிட்டாலும் துன்பம் ...
இரட்டை வலியை ....
காதல் கண்களை தவிர ....
வேறு அனுபவிக்குமோ ...?




திருக்குறள் : 1179
+
கண்விதுப்பழிதல்
+
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 99

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக