இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

எது வந்த போதும் ஏற்றுகொள் மனமே :

காதலில் விழுந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
ஏற்றுக்கொண்டது என் இதயம்
அவன் உண்மையான நேசம் மட்டுமன்றி
அந்த காதலையும் தான்

வெற்றி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

தோல்வி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் நம்பிக்கையை மட்டுமன்றி
அந்த கடவுளையும் தான்

ஆத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
நாத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்

நாத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
ஆத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி
அவனின் உள்ளத்தையும் தான்

உன் மனமென்பதை
நிலையாக வைத்திருக்காவிடில்
விடை அறியா
கேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை ?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக