இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 நவம்பர், 2016

அன்னையும் சென்னையும் ...!


 அன்னையும் சென்னையும் ...!


கவிப்புயல் இனியவன் on Tue Apr 09, 2013 8:31 pm
உப்பிட்டவரை உள்ளலவுவரை நினை சொன்னாள்
என் -அன்னை ....!
வந்தாரை வாழவை என்கிறது உங்கள் -சென்னை

உங்களைப் பெற்றது -அன்னை
உங்களை வளர்ப்பது -சென்னை ...!

கையோரம் வைத்து வளர்க்கிறாள் -அன்னை
கைத்தொழிலால் வளர்க்கிறாள் -சென்னை ...!

அன்பால் வளர்க்கிறாள் -அன்னை
ஆவின்பால் தருகிறாள் -சென்னை ...!

(நான் அறிந்த சென்னையை கொண்டு சில வரிகள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக