இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 நவம்பர், 2016

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!
கவிப்புயல் இனியவன் 2013
---------
தனிமை...
எல்லோருக்கும் கிடைக்காத தவம்...!
அதுவே ஒரு சிலருக்கு வரம்..!
கவிதைகளின் ....
கதைகளின் பிறப்பிடம்...!
கனவுகளின் உறைவிடம்..!
கடந்தகாலத்தை மீள்படிக்க
உதவும் நாற்குறிப்பேடு..!
என்னை நானே உற்றுப்பார்த்திட
வழி செய்யும் கண்ணாடி...!
மெளனத்தின் வழி
பலநூறு கதை சொல்லும் கருவூலம்..!
காதடைக்கும் இரைச்சல்விடுத்து
இதம் சேர்க்கும் தியானபீடம்...!
இது……….
எல்லாம் இருந்தும்….
இளைப்பாற சில பொழுதுகள்
தனிமை சேர்பவன் மனநிலை....!!
தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!
&
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக