இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

எல்லாப்பருவத்திலும் நட்பு...!

 எல்லாப்பருவத்திலும் நட்பு...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:17 pm
காதல் ஒரு பருவத்தில் 
தான் வரும் ஆனால் நட்போ 
எல்லாப்பருவத்திலும் வரும் அவை ...

மழலைப் பருவத்தில் நட்பு : 

உனக்கு என்னைத்தெரியாது 
என்னை உனக்கு தெரியாது
நீயும் கையசைத்தாய் நானும் 
கையசைத்தேன் ..
அவ்வளவுதான் ..ஆனாலும் 
அதில் புரியாத சுகம்
உண்டு ...........!!!!

குழந்தைப் பருவத்தில் நட்பு : 

நீயும் நானும் விளையாடுவோம் 
கிடைத்தவற்றால் அடிபடுவோம் 
மீண்டும் சந்திப்போம் ..
பகமையென்றால் என்ன 
என்றே தெரியாத நட்பு ..!

காளைப் பருவத்தில் நட்பு :

சுற்றுவதற்கு நட்புத்தேவை 
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!

வாலிபப் பருவத்தில் நட்பு : 
என் வலியையும் சுகத்தையும் 
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் 
தரவும் நட்புத்தேவை ....!

முதிர்ந்த பின் நட்பு :
வாழ்க்கையின் துன்பங்கள் 
துயரங்கள் இழப்புக்களை 
அனுபவங்களைப்பகிர்ந்து 
கொள்ளஒரு நட்பு தேவை ..!

நட்புக்கு எல்லையே இல்லை .......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக