இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 செப்டம்பர், 2014

இரவுகளே நிறுத்துங்கள்

இரவுகளே நிறுத்துங்கள் 

காதல் துன்பத்தில் 
பெரும் துன்பம் விடியாத 
இரவுகள் தான் .....!!!
நினைவுகளோடு தூங்காத ..
கண்ணுக்கு விடியல் தான் 
விடுதலை .......!!!

நீண்டு போகும் 
இரவுகளே நிறுத்துங்கள் 
முடியவில்லை இதற்கு 
மேல் நினைவுகளோடு 
ஏங்கிகொண்டிருக்க .....!!!

திருக்குறள் : 1169
+
படர்மெலிந்திரங்கல் 
+
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் 
நெடிய கழியும் இரா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 89

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக