இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 3 செப்டம்பர், 2014

அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

எங்கள் காதலை 
யாரும் எவரும் அழித்து 
விட முடியாது - ஊரார் 
என்ன பேசினாலும் என்ன 
நடவடிக்கை எடுத்தாலும் 
எம் காதல் அழியாது ...!!!

எம் காதலை ...
ஊரார் பேசி பேசி அழித்து.. 
விடலாம் என்று பகல் ...
கனவு காண்கிறார்கள் ....
நெய்யை ஊற்றி நெருப்பை 
அணைக்க துடிக்கிறார்கள் ...!!!

திருக்குறள் : 1148
+
அலரறிவுறுத்தல் 
+
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 68

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக