இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

நம்புதில்லை இந்த மனம் ....!!!

நம்புதில்லை இந்த மனம் ....!!!

கண்ணாளனே....!!!
செல்லபோவது உறுதி 
சொல்லப்போவதும் உறுதி 
எப்படி உங்கள் மனம் 
கல்லானது ...?

இங்கிருந்து துடிக்கபோகும் 
என் உள்ளத்தை ஒருகணம் 
சிந்தித்து பார்த்தாயா ...?
சென்றுவருவேன் கண்ணே
கலங்காதே என்றாலும் 
நம்புதில்லை இந்த மனம் ....!!!

திருக்குறள் : 1156
+
பிரிவாற்றாமை
+
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் 
நல்குவர் என்னும் நசை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 76

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக