இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

என்னவனின் பிரிவை விட ...!!!

என்னவனின் பிரிவை விட ...!!!

தொட்டால் தான் சுடும் -தீ 
அதுகூட பெரியதொரு ...
துன்பத்தை தருவதில்லை ...
என்னவனின் பிரிவை விட ...!!!

காதலிலும் காமத்திலும் ...
அன்புக்குரியவரின் பிரிவு ...
தீயை விட கொடுமையான 
வேதனை வடுவையும் ...
தருகிறதே .....!!!

திருக்குறள் : 1159
+
பிரிவாற்றாமை
+
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல 
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 79

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக