இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 நவம்பர், 2016

எப்போதாவது கேட்டிருக்கிறாயா....?

என்னுயிரே
உனக்கேன் இவ்வளவு சோகம் ...?
நான் இருக்கையில் உனக்கேன் ....
சோக கவிதை என்று .....
எப்போதாவது கேட்டிருக்கிறாயா....?

என் உள்ளத்தில் .....
காதல் சோலைகளைவிட ...
சோகங்களே அதிகம் ...
சோகங்களை மறைக்கலாம்....
மறக்கமுடியாது ...!!!

சோகங்களை......
மறைக்கத்தான் சோகக்கவிதைகள்...
எழுதுகிறேன் கண்ணே.....
சோலையில் நின்றவனைவிட ..
சோகத்தில் நின்றவன் தான் ..
சாதித்துள்ளான் ....!!!
நான் சோகத்தில் நிற்கிறேன் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக