இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்

அன்பு உள்ளங்களே 
அனேகரின் வேண்டுகொள்ளுக்கு ஏற்ப பல்வேறு வாழ்த்துக்கவிதைகள் பதிய போகிறேன் உங்கள் ஊகப்படுத்தளுக்கு 
மிக்க நன்றி 

என்றும் உங்கள் கவி 
கவிப்புயல் இனியவன்
 
பொதுவான பிறந்தநாள் கவிதை 

பிறந்து விட்டாய் இந்த 
பூமியை புரிந்து கொள்ள 
பிறந்து விட்டாய் ....!!!

இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும் 
அதிசய உலகம் ....!!!
விளங்கியும் விளங்காத 
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ....
நொந்துபோய் வெந்து 
வீழ்ந்து விடாதே ....!!!

தூய சிந்தனைவேண்டும்.
சிந்தித்ததை சீரியதாய் 
செய்ய வேண்டும் ....
உனக்காக எனக்காக 
வாழவேண்டாம் ........
நமக்காக வாழ கற்று கொள்....!!!

வருடங்கள் வருவதும் 
அவை நம்மை கடப்பதும் 
விந்தையில்லையே 
அதற்காக கொண்டாட்டம் 
தேவையில்லையே ....!!!

கடந்த 
வருடத்தில் என்ன ..?
செய்தாய் திரும்பி பார் ...!!!
இந்த 
வருடத்தில் என்ன செய்ய ..?
போகிறாய் .. எண்ணிப்பார் 
பிறந்த நாளில் ஒரு சபதம் எடு 
இருக்கும் தீய குணத்தை 
அழித்துவிடு ....!!!

பிறப்புகளில் உயர் பிறப்பு 
மானிட பிறப்பு ....
இப்பிறப்பில் நீ எல்லாம் 
பெறவும் ....
பெற்றவற்றை உலகிக்கு 
பகிரவும் வாழ்த்துகிறேன் 
மகிழ்கிறேன் உன் பிறந்த 
தினத்தை நினைத்து .....!!!

வாழ்க வளமுடன் 
மிளிர்க தமிழுடன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக