இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 டிசம்பர், 2015

சொல்லாடல் கவிதைகள்

சொல்லாடல் கவிதைகள்

புரட்சி 
-----------

இனி 
ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...
ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....
ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....
பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........
................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்..... 
................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை...... 
................................................................உலக விடுதலைக்காய் போராடிய......
................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......
................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ....
................................................................நாமெல்லாம் ஒரு தூசி தூசி தூசி ........!!!
பிரான்சில் அடிமை புரட்சி .....
இங்கிலாந்தில் கைதொழில் புரட்சி ......
இந்தியாவில் சுதந்திர புரட்சி ......
சோவியத் ரசியாவில் தொழில் புரட்சி ....
இலங்கை தீவில் வாழுருமை புரட்சி ........
...............................................................பட்டினியால் பிரான்சிய புரட்சி ......
...............................................................பகுத்தறிவால் இங்கிலாந்து புரட்சி .....
...............................................................அடக்கு முறையால் சுதந்திர புரட்சி ......
...............................................................உழைப்பு சுரண்டலால் தொழில் புரட்சி .....
...............................................................ஒடுக்கு முறையால் வாழுருமை புரட்சி ......!!!


^^^

சொல்லாடல் கவிதைகள் 
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக