இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 டிசம்பர், 2015

உன்னில் ஆசைப்பட்டேன்

ஆசை ஆசையாய் உன்னில் ஆசைப்பட்டேன் .....
ஆலம் விழுதுபோல் ஊன்ற போகிறேன் ....
ஆறறிவு இருந்தும் உன்னில் ஆசைப்பட்டேன்....
ஆத்திரம் கொள்ளாதே என் ஆருயிரே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!

ஆதவன் போல் உன்னை ஆதரிப்பேன் ....
ஆகாயம் போல் உன்னை தூக்கி வைப்பேன் ....
ஆகாரம் போல் உன்னை புசித்துடுவேன் ......
ஆணவத்தால் என்னை இழந்துடாதே .....
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!

ஆண்டாண்டாய் உனக்காய் காத்திருப்பேன் ....
ஆண்டவன் கிருபையால் அடைந்துடுவேன் .....
ஆழம் அறியாமல் காலை விடவில்லை ....
ஆயிழையே என்னை ஆதரிக்காயோ ...?
ஆறுதலாய் ஜோசித்து ஆறுதல் சொல்வாயோ ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக