இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 03

ஆதவனின் தந்தை சாமி ...
தினக்கூலி அன்று உழைத்தால் ...
அன்று உணவு என்ற வாழ்கை ...
இதுதான் தொழில் என்று இல்லை ....
எந்த வேலை கிடைக்குமோ ....
அந்த தொழிலை செய்வார் ....!!!

ஆதவனுக்கு அடுத்த ஒரு ...
தங்கை அவளுக்கும் இவனுக்கும் ....
இரண்டு வயது வேறுபாடுதான் ....
தங்கைக்கு திடீரென பெரும் ....
நோய் - கடவுளின் சோதனை ...
ஆதவனும் நோய்வாய் பட்டான் ....!!!

இருவரையும் ஒரே வைத்தியசாலை ..
ஆதவன் தந்தை வைத்தியசாலை ...
மேல்மாடியில் ஆதவனையும் ....
கீழ் மாடியில் ஆதவனின் தாய் ...
தங்கையையும் வைத்திருகிறார்கள் ...!!!

உழைப்புகள் இரண்டும் முடங்கின ...
வீட்டில் அடுப்படியில் பூனை ...
நிம்மதியாய் தூங்கியது ....!!!

^^^
தொடரும் இவன் போராட்டம்
 ^^^
வாருங்கள்
இவனின் வாழ்கையை
கேட்போம் ....
^^^
நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்
வசனக்கவிதை
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக