இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 பிப்ரவரி, 2016

கனவாய் கலைந்து போன காதல் 06

பூவழகன் .....
திகைத்து நின்றான் ....
தானோ அன்றாடம் சாப்பாடுக்கு ....
திண்டாடும் வறுமை இளவரசன் ....
அவளோ காரில் வரும் வசதி ...
கொண்ட பண  இளவரசி .....
இது நமக்கு சரிவராது .....
ஒதுங்கினான் - பூவழகன்....!!!

வகுப்பறைக்கு வந்தாள் இளவரசி .....
எல்லோரும் அவளை சூழ்ந்தனர் ......
தங்கள் பெயரை சொல்லி அறிமுகம் ....
எல்லோருக்கும் கை கொடுத்து ....
பழகும் திறந்த மனம் - பரந்த மனசு ....
பூவழகனோ ஆவலுடன் இருந்தும் ....
பேசவில்லை ....!!!

பூவழகன் இதயமோ அவள் ....
மீது சுற்றி திரிய - கூச்சமும் ....
பொறாமையும் மனம் முழுதும் ...
ஏக்கத்துடன் காத்திருக்க இருக்க ....
நாளும் முடிவுக்கு நெருங்குகிறது ...!!!

எப்போது என்னோடு பேசுவாள் ...?
என்ன பேசப்போகிறாள் ....?
பூவழகனின் தவறான ஏக்கம் ....
புதிய மாணவியுடன் ...
பூவழகன் தான் பேசவேண்டும் ....
தெரிந்தும் அவள் பேசட்டும் முதலில் ...
என்று ஆணழகன் என்ற நினைப்பில் ...
காத்திருந்தான் பூவழகன் ......!!!

^^^

தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 06
வசனக்கவிதை....!!!

^^^

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக