இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 பிப்ரவரி, 2016

கனவாய் கலைந்து காதல் 07

அடுத்த நாள் பாடசாலைக்கு ....
பூவழகன் சற்று நேரத்துடன் ....
வந்துவிட்டான் - அதிர்ச்சி ....
அவளும் வந்துவிட்டாள் .....!!!

பூவழகனுக்கு அருகில் தயங்கி .....
தயங்கி வந்தாள் - எல்லோரும் ....
என்னோடு பேசினார்கள் ...
நீங்க மட்டும் ஏன் பேசல்ல ....?

பூவழகன் ....
எனக்கு அதிகம் பேசுவது ....
பிடிக்காது... பேசவில்லை .....
எனக்கும் அதிகம் பேசுவது ....
பிடிக்காது - அதனால் ....
உங்களை எனக்கு பிடிச்சிருக்கு ....
பூவழகன் அதிர்ந்து போனான் ...!!!

" உங்களை எனக்கு பிடிசிருக்கு "
சொன்ன வார்த்தை உடலில் ...
மின்சாரம் பாய்ந்தது போல் ...
உறைந்து போனான் பூவழகன் ....!!!

உங்க பெயர் என்ன ....?
பூவழகன் கேட்டான் ...
உங்க பெயரென்னா....?
அவள் கேட்டாள் ....
என் பெயர் பூவழகன் ...!!!

அப்போ என் பெயர் ...
எதுவாகவும் இருந்துட்டு
போகட்டும் -நீங்க
பூவழகி என்று கூப்பிடுங்கள் ...
என்று சொன்ன அந்த நேரம் ...
அவளது தோழி அவளை ....
அழைத்து சென்றுவிடாள் ....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்து போன காதல் 07
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக