இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 பிப்ரவரி, 2016

தாயே.. அம்மா... அன்னையே ..!!!

உயிர் ....
தந்து உயிர் காத்து ...
எந்த உயிருக்கும் ...
அவதாரம் கொடுக்கும் ...
அவதார பிறப்பே தாய் ....!
அவதரிக்க அவதாரம் ...
எடுத்து உலாவிவரும் ...
உயிராய் இருப்பாதால் ...
தாயே உம்மை "தாயாய் "
வணங்குகிறேன் ....!!!

பெற்ற பிள்ளை படும்பாடு  ....
பார்க்கமுடியாமல் தன்னை ...
வருத்தி பாலூட்டி உணவூட்டி ....
இரக்கத்தோடு அரவணைத்து ...
இரத்தத்தோடு இரக்கத்தையும் ....
வளர்க்கும் ஆன்மீக உறவே ...
"அம்மா" உம்மை "தாயாய் "
வணங்குகிறேன் ....!!!

தன் பிள்ளையை போல் ...
பிறர் பிள்ளையையும்....
அரவணைக்கும் ஒரே ஒரு ....
பிறப்பாய் சேவைசெய்யும் ....
உனந்த உள்ளம் கொண்ட ...
உலக சேவகியாய் உம்மை ....
பார்கிறேன் தன் பிள்ளைக்கு ..
மட்டுமல்ல பிற பிள்ளைக்கும்
தாயாய் இருப்பதால் -தாயே
"அன்னையாய் "வணங்குகிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக