இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கவிப்புயலின் புதிய கவிதைகள் 01

கவிப்புயலின் புதிய கவிதைகள்
-----------------
உன் ஒவ்வொரு பார்வைக்கும் ...
ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ...
உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ...
ஒவ்வொரு கருணை இருந்தது ....!!!

இப்போ .....
நான் அருகில் வரும் போது ....
எங்கேயோ பார்க்கிறாய் ....
நான் காதலோடு பேசுகிறேன் ...
நீயோ காரணமில்லாமல் ...
பேசுகிறாய் ....!!!
இதயம் மட்டும் வலிக்கவில்லை ...
காதலும் வலிக்கிறது ...!!!
-----------------
காதல் உள்ள இதயமே ....
துடித்து கொண்டு இருக்கும் ....
காதலை இழந்த இதயம் ...
துடிதுடித்துக்கொண்டு இருக்கும் ....!!!

காதலோடு வாழ்பவர்கள் ....
சாதனையோடு வாழ்கிறார்கள் ....
காதலை இழந்து வாழ்பவர்கள் ...
சாத்தானோடு வாழ்கிறார்கள் ....!!!
காதல் இரு சுவை கொண்டது ...
காதல் இருக்கும் போது இனிக்கும் ...
இல்லாதபோது கசக்கும் ....!!!
+
காதல் வலிக்கிறது
கவிதை எண் -02
------------------------------------
நன்மை தீமை ...
இன்பம் துன்பம் ....
அனைத்தும் சொல்வதும் ...
கேட்பதும்  காதல் தான் ....!!!

உயிரே இவற்றில் இலாப ...
நட்டம் பார்க்காதே ....
காதல் தோற்றுவிடும் ....
நீ பிரிந்து விட்டாய் என்றால் ...
தீமையையும் துன்பத்தையும் ...
சுமையாக எடுத்துவிட்டாய் ...!!!
+
காதல் வலிக்கிறது
கவிதை எண் -03
-----------------------
காதல் சோகத்தை மறக்க ....
வைக்கவேண்டும் - நீயோ ...
அடிக்கடி சோதித்து பார்கிறாய் ....
காதல் ஒன்றும் அளவுகோல் ...
கருவியல்ல - அளவிட முடியாத ...
உணர்வு ....!!!

நீ என்னை எவ்வளவு ...
வேண்டுமானாலும் சித்திரவதை ...
செய்துகொண்டே இரு ....
தோற்கப்போவது -நீதான்
நான் காதலோடு இருக்கிறேன் ...
நீயோ காதலிப்பதோடு இருக்கிறாய் ...!!!
+
காதல் வலிக்கிறது
கவிதை எண் -04
--------------------
என் இதயத்தை - நீ
களிமண்ணாக நினைக்கிறாயோ...?
அதுதான் நீ இப்படியெல்லாம் ...
இதயத்தை பிசைந்து பார்கிறாய் ...!!!

நீ
எப்படி வேண்டுமென்றாலும் ...
இதயத்தை பிசைந்து கொள் ..
எனக்கு சிறு கவலை -உனக்கு
கை வலிக்குமே என்றுதான் ...!!!
நீயும் வலியை சுமந்து பார் ..
காதல் வலியுடன் இனிமை ...!!!
+
காதல் வலிக்கிறது
கவிதை எண் -05

-----------
வீடு  முழுதும் நறுமணம் ....
இருந்தாலும் - சிறுதுளி...
துர்நாற்றம்  வீட்டையே ...
கெடுத்து விடும் ....!!!

நீ எவ்வளவு நல்லவனாக ...
இருந்தாலும் - கெட்ட நட்பு ....
உன்னையும் கெடுத்தே தீரும் ...!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை
-------------
மண்ணை பொன்னாக மதித்து ...
மண்ணை பெண்ணாக மதித்து ....
மண்ணை உயிராக மதித்து ...
மண்ணை பொன்னாக்க விதைத்தான் ...
கடன் வட்டி தொல்லை அவனை ...
மண்ணுக்குள் கொண்டு சென்று ....
விட்டதே ....!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை

--------------
பாம்பை ...
கண்டால் படையும் ...
நடுங்கும் என்கிறார்கள் ...
பாம்பாட்டிக்கு பாம்பு நடுங்குதே ...
பார்ப்பவனுக்கு பாம்பு ....
பாம்பாட்டிக்கு தொழில் ...!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை
-----------


அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!!!


ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!!


இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இரண்டர என்னோடு வாழ்பவளே ...
இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!!!


ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!!


உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!!!


ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!!


என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்
எதிர்காலமாகிவிட்டாய் -நீ
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!!


ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!!


ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம்
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!!!


ஒருவனுக்கு ஒருத்தி நீ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!!!


ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!!!


ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ
ஔவை தமிழின் இசை அழகியே -நீ
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி  வாழ்வோம் வா ...!!!

------------

உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!

-------------
காதலிக்க
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!

---------
காதலே ...
நான் உன்னை பிரியாதவரை ...
நீ என்னை பிரியாது இரு ....
இல்லையேல் நான் உலகை ....
பிரியும் வரையாவது  நீ
பிரியாமல் இரு ....!!!

-----------------------
காதலே ....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறது ...
காதல் ....!!!

---------------

உண்மையை சொன்னால் ....
உன்னை பற்றிய கவிதைதான் ...
உன் அசைவுகளை வரிகலாக்குகிறேன்....
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி ....
உரைக்கபோகிறேன்....
உன் உதடுகள் பேசத்தேவையில்லை ...
அசைந்தாலே போதும் ....
நான் ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் ...!!!
+
இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை

--------

நீ
பௌணமி அன்றுதான் ...
பிறந்திருக்க வேண்டும் ....
வட்டமுகத்துடன் ....
வண்ண மேனியுடன் ....
பிறந்திருகிறாய்....!!!

முத்துப்போல் பல் அழகியல்ல ...
உன் பல்லைபோல் முத்து அழகு ...!!!
உன் கழுத்தை அலங்கரிக்க ....
ஆபரணம் தேவையில்லை ...
ஆபரணங்கள் அழகு பெற உன் ..
கழுத்து தேவை ....!!!
+
இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை - 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக