இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

ஒரு தலைக்காதல் கவிதை

ஒற்றை பூ தான் பூக்கிறது.....!!!

உயிரே ....
என் பிறந்தநாளுக்கு .....
ரோஜா செடியை தந்தாய் ....
பிரியாத வயதில் நீ தந்தது ....
பரிசு என்று நினைத்தேன் ....
இன்றுவரை அது ஒற்றை பூ ....
தான் பூக்கிறது.....!!!

உன்
திருமண நிகழ்வில் ......
என்னை கண்டதும் ....
உன் கடைகண்ணில்.....
வழிந்த கண்ணீரில் புரிந்தது ....
உன் ஒற்றை காதலின் வலி ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன்
----------
உன் இதயத்துக்கு எப்போது புரியுமோ ....?

போதும் உயிரே ....
உன்னை நினைத்து நான் ...
ஏற்கும் இதய வலியின் வலி ....
என்னை நீ ஏற்பாயா....?
தூக்கி எறிவாயா ..........?
உனக்கும் எனக்கும் இடையே ....
உள்ள இடைவெளி -காதல் ....!!!

நீயோ ....
கோபுரத்தில் வாழ்பவள் ....
நானோ கோபுரத்தின் முன் ....
தரிசனத்துக்கு நிற்பவன் ....
இதயத்துக்கு புரியவில்லை ....
உன் அந்தஸ்து -என்னசெய்வது ....?
கூலிக்கும் காதல் வரும் ....!
உன் இதயத்துக்கு......
எப்போது புரியுமோ ....?

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன்
--------
உன் புகைப்படத்தோடு பேசுகிறேன்

எல்லோரும் காதலியோடு ....
போசுவார்கள் ..உண்பார்கள் ....
சுற்றி திரிவார்கள் .......!!!

நான் ....
உன் புகைப்படத்தோடு ....
பேசுகிறேன்..சுற்றி திரிகிறேன் .....
ஒருதலை காதல் என்றால் ...
ஒரு இதயம் தானே ....
வலியை தாங்கவேண்டும் ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன்
-------------
ஒருதலை காதலருக்கு .....!!!

எங்கிருந்தாலும் வாழ்க ....
இது காதல் தோல்வியால் ....
வரும் வார்த்தை .....!!!

ஒருதலை காதலருக்கு .....
எங்கிருந்தாலும் வாழ்க .....
இதயத்தில் நிரந்தரமாய் ....
எழுதபட்டிருக்கும் வாசகம் .....
இணையமாட்டோம் என்பது ....
நிச்சய நிகழ்வுதானே ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன்
----------
உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!!

நல்லவேளை .....
உன்னை ஒருதலையாக ....
காதலித்தேன் .....
நீ காதலனோடு வந்து ....
நலம் விசாரித்தபோது .....
உதடு சிரித்தது ....
இதயம் கண்ணீர் விட்டது ....!!!

போகட்டும் விட்டுவிடு .....
எனக்கென்ன தோல்வியென்ன ....?
புதிதா ...?
நல்லவேளை உயிரே ....
உனக்கு வேதனையில்லை ...
அதுபோதும் என் காதலுக்கு ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக