இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கவிதையும் வினாவும்

என்னுயிர் நண்பா .....
உன்னை விட்டு யாரிடம் ....
பகிர்வேன் என் உணர்வை ...?

மனதிலே
துன்பம் வரும்போது .....
என்னோடு இருந்து அழும் ...
ஒரே ஜீவன் நீதானே ....
இன்பம் வரும்போதும் ...
என்னோடு இருந்து ....
சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!!

ஒரே ஒரு கவலை உன்னால் .....
நான் அழும்போது தான் அழுகிறாய் ....
நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் ....
எப்போது என்னை நீ அழவைப்பாய்....?
எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...?

எப்படி உன்னால் முடிகிறது ...?
என் உணர்வுகளை அப்படியே...
எனக்கு காட்டுகிறாய் ....?
என்மீது கொண்ட கோபத்தால் ....
உன்னை அடித்துவிட்டேன் .....
எனது கையில் குருதி ....
உனது இதயம் சுக்குநூறாகியது.....!!!
*
*
*
*
என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...?
---------------

அவர் வரும்போது .....
கையாட்கள் பலர் .....
கைகூப்புவோர் பலர் ....
செருக்கோடு சிரித்தும் ....
சிரிக்காததுமாய் செல்வார் ....!!!

அடுத்த வேளைக்கு....
உணவுக்காய் அங்கலாக்கும் ....
இவன் வரும்போது ....
போ போ தூரப்போ என்று ....
துரத்தும் கைகள் அதிகம் ....
வறுமையால் பணிவுடன் ...
ஒதுங்குவான் ....!!!

இருவரும் ஒருநாள் ....
ஒரே இடத்தில் சந்திப்பார் ....
கை கூப்பியவரும் துணையில்லை ....
கை விரட்டியவனும் துணையில்லை .....
*
*
*
இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக