இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 டிசம்பர், 2015

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

இயற்கை அன்னையே கொஞ்சம் கருணை காட்டம்மா
-----------------
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
-----------------
போதுமம்மா நீ கோராத்தாண்டவம் ஆடியது .
தண்ணீரின் அளவு கூடி கண்ணீரின் கூடிவிட்டதம்மா ....!!!

குழந்தைகள் ....
முதியவர்கள் ....
கர்ப்பிணி தாய்மார்கள் ....
நோயாளிகள் .....
விசேட திறனாளிகள்....
படும் வேதனையை வரிகளால் ...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

வீட்டோடிருந்த வளர்ப்பு பிராணிகள் .....
ஊர்வன ,பறப்பன . நடப்பன ....
படும் வேதனைகள் வரிகலாளால்....
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

அன்புள்ள வர்த்தகர்களே .....
நீங்கள்படும் வேதனைகள் உலகம் ....
அறியும் உங்களுடம் இருக்கும் இருப்பை ....
உள்ளவிலைக்கே வழங்கி தவிக்கும் ...
மக்களுக்கு உதவிசெய்வீர்களாக .....!!!

அரசியல் வாதிகளே ....
எல்லாவற்ரையும் அரசியலாக்காதீர்கள் .....
மக்களின் துன்பத்தை இலாபமாக ....
பயன்படுத்தாதீர் ......!!!

என் உறவு மக்களே ....
இப்போது யாரையும் எதிர்பார்காதீர் .....
முடிந்தவரை அருகில் உள்ளவர்கள் ....
அருகில் உள்ளவர்களுக்கு உதவுவதே ....
இப்போதைய கடமை .....
உயிரை காப்போம் .....!!!
அருகில் உள்ள உறவை காப்போம் ....!!!

இது கவிதையல்ல என் தவிப்பு ....
வரிகள் கூட வரமறுக்கிறது ....
உறவுகள் தவிக்கும்போது ....
கவிதைகள் எப்படி வரும் ....?

+
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக