இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜனவரி, 2018

மூன்றாம் அறிவு



மூன்றாம் அறிவு
--------------------------
"அ" எழுதியவுடன்......
ஆரம்பமாகிவிடும்.....
ஏட்டறிவு........!

ஏட்டறிவில்.....
ஏற்றம் கண்டவரும்........
உள்ளனர்......
ஏட்டறிவு எட்டாதவரும்.....
உள்ளனர்.........!

ஒவ்வொரு வயதுக்கும்.....
ஒவ்வொரு பட்டறிவு.......
ஏட்டறிவில்லாமல்.......
பட்டறிவால் வாழ்வியலில்.....
பட்டதாரியானவர்களும்.....
ஏராளம்.........!

ஏட்டறிவும் பட்டறிவும்.....
போராட்டத்தாலேயே.......
பெறப்படுகிறது.......!

ஏட்டறிவும் பட்டறிவும்.....
ஏதோ ஒருவகையில்.....
யாரோ ஒருவரின் சாயல்....
அல்லது நிழலாகவே.....
இருக்கிறது...........!

சாயல்களும் நிழல்களும்.....
காலத்தால் மறைந்துவிடும்...
இல்லையேல் அவரவர்......
காலத்துக்கே பொருந்தும்......!

இன்றைய உலகுக்குதேவை......
மூன்றாம் அறிவே.......
யாருடைய சாயலோ நிழலோ.....
இல்லாமல் உனக்கே உரிய......
அறிவே மூன்றாம் அறிவு.......!

மூன்றாம் அறிவை......
தன்னுள்ளே அறிந்தவனே.....
இன்றைய சாதனையாளன்......
இது ஆளுக்காள் வேறுபடும்.....
நிழலாகவும் சாயலாகவும்.....
இன்னொருவருக்கு தொடராது.....
தொடரவும் முடியாது.....!

@
கவிப்புயல் இனியவன்

திங்கள், 29 ஜனவரி, 2018

"அ" தரும் அழகுக்கவிதை

அ ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
அ ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!

அ ற்புதங்கள் என்பது ....
அ திசயம் செய்வதல்ல ...
அ ன்புக்கு கட்டுப்பட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!

அ ன்று நடந்த துயரை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்தால்...
அ ன்றும் இறக்கிறாய்....!

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எது....?

^^^^^
கவிப்புயல் இனியவன்
"அ" தரும் அழகுக்கவிதை

திங்கள், 22 ஜனவரி, 2018

உள்ளம் சுத்தமாகும்....

சுற்றி சுற்றி வருகிறேன்
கொத்தி கொத்தி கலைக்கிறாய்
காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

@

காதலி உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்.....
இரண்டும் செய் வாழ்கை வளமாகும்...!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

காதல் தந்த காயம்....

நீ ................
காதலோடு பார்கிறாய்....
என்ன செய்வது எனக்கு......
உன்மேல் காதல் செய்ய....
கடந்த காதல் தந்த காயம்....
தடுக்கிறதே......!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை

சின்ன அணுக்கவிதை

நீ தான் பிரிந்தாய்.....
சொறனைகெட்ட இதயம்...
நீ வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்குது......!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை

சின்ன அணுக்கவிதை

உன் சிரிப்பில் கருகாமல்.....
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தல் இறந்திருக்கும்....

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை

சனி, 13 ஜனவரி, 2018

திருமகளே வருக வருக

தை - திருமகளே வருக வருக ....
தைரியம்  சிறக்க வருக வருக ....
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ....
தைத்தியரை அழிக்க வருக வருக ....!!!

முற்றத்தில் கோலமிட்டு .....
முக் - கல் அடுப்பு வைத்து ....
முத்திரி விளக்கேற்றி .....
முக்குணத்தை அழிக்க ...
முக்காலமும் சிறப்பாக அமைய ....
கரம் கூப்பி அழைக்கிறேன்
தை- திருமகளே வருக வருக ....!!!

உன்னையே உயிராய் .....
உன்னையே தொழிலாய் ....
உன்னையே மூச்சாய் வாழும் ....
உன்னையே தெய்வமாய் .....
உழைத்து வாழும் உழவு விவசாயம்...
செழித்து வாழ என் உயிர் தாயே ....
தை- திருமகளே வருக வருக ....!!!

^
பொங்கல் கவிதை
கவிப்புயல் இனியவன்
2018 . 01 .14

வியாழன், 11 ஜனவரி, 2018

உயிர் தோழன் நீ....

மறக்க நினைக்கிறேன்
பலவற்றை ...
நினைக்க விரும்புகிறேன்
சிலவற்றை....!

மறக்கவே முடியாதவை
நினைக்கவே முடிந்தவை
ஒன்றே ஒன்றுதான்
நட்பு ....!

தோள் கொடுக்க....
உயிர் தோழன் நீ....
இருக்கும் வரை...
தோல்விகள்........!

ஆயிரம் ஆயிரம்.....
தோன்றினாலும்......
துவண்டு விழமாடேன்
உன் சுட்டு விரல்
எனக்கு சுட்டிக்காட்டும்
வெற்றியை ....!

@
கவிப்புயல் இனியவன்

புதன், 10 ஜனவரி, 2018

முடிந்த கதை....!

பட்ட மரத்தில்
பட்டாம் பூச்சிக்கு...
என்ன வேலை....?

என்னை.....
பட்ட மரமாக்கி விட்டாய்.......
இப்போ........
பறக்கத்துடிக்கும்
பட்டாம் பூச்சி -நீ.........!

கனவுகளுக்கும்.....
கற்பனைகளுக்கும் ......
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து.......
மரத்தை மாற்றிவிடு ...!

பிரிந்து சேரத்துடிக்கும்
இதயம் ............
உடைந்த பானையின்.....
முடிந்த கதைதான்....!

@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

செவ்வாய், 9 ஜனவரி, 2018

இதய அறைக்குள் .....

தமிழ் மொழியே......
முதல் மொழி.....
உன் விழிகள் பேசும்....
மொழியே......
உலக மொழி .........!

@

நீ .....
சிப்பிக்குள் .......
முத்தைப்போல் .....
என்.......
இதய அறைக்குள் .....
இருக்கிறாய் ....!

@

கவிப்புயல் இனியவன்
கவிதைத்துளிகள்