இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஏப்ரல், 2019

உன்னை காதலித்தேன்.......!!!

பாம்பு சட்டையை......
கழற்றியது போல்......
என்னை கழற்றி விட்டாய்....!!!

எல்லா ஜீவராசிக்கும்.....
ஒரு துணை கிடைக்கும்....
நம்பிகையோடு.......
உன்னை காதலித்தேன்.......!!!

காதலையும்......
தேடுதல் பொறியில்.......
தேடாதே......!

@
​கவிப்புயல் இனியவன்
​கஸல் கவிதைகள்

புதன், 3 ஏப்ரல், 2019

நானும் சுமைதாங்கி.....

நம் காதல்.....
சக்கரத்தில் ஒன்று.....
கழன்று வருகிறது.....
தள்ளி நில் .....
விபத்துக்குள்ளாகி...
விடாதே.......!!!

சொற்களும் கன்னத்தில்......
அறைந்ததுபோல் இருக்கும்.....
காதல் தோற்றால்.......!!!

நானும் சுமைதாங்கி.....
உன் வலியையும்......
​என் வலியையும் சுமக்கிறேன்....!!!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதைகள்

எவ்வளவுதான் காதலை.....

தொட்டால் சுடுவது .....
நெருப்பு மட்டுமல்ல .....
பெண்ணும் தான் .....!!!

அர்த்த நாதீஸ்வரராய் .....
இருந்த நம் காதல் ......
சரிபாதியாய் .......
கிழிந்துவிட்டது ......!!!

சிபியரசனின் .........
நியாய தராசுபோல் ......
எவ்வளவுதான் காதலை.....
கொட்டினாலும் .........
சமனாகுதில்லை ......!!!

@
கவிப்புயல் இனியவன்
​கஸல் கவிதைகள்

திங்கள், 1 ஏப்ரல், 2019

காயப்படுத்திய உனக்கு.....

நீ
மௌனமாய் இருப்பதில்....
புரிகிறது என் காதலுக்கு....
மலரஞ்சலி வைத்தது....
நீ..........!!!

காதலுக்கு உரமே......
கனிவான பேச்சு......
காயப்படுத்திய உனக்கு.....
அதெல்லாம் எப்படி......
புரியும்........?

நீ
பார்த்தநாள்...!
மரணம் தாண்டி
வாழ்ந்த நாள்.....
இனி...............
இறந்தாலும்.......
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!

@
இப்படிக்கு உன்.....
கவிப்புயல் இனியவன்