இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

ஒரு வரியில் ஒரு சொல் கவிதை

 

அனந்தியே.... 
அன்புக்குரிய... 
அரசியே.... 
அகிலத்தையும்....
அண்டதையும்.... 
அதிரவைக்கும்....
அழகியே.....
அன்னமே.......
அன்பும்... 
அடக்கமும்.... 
அங்கங்களாய் ....
அமைந்த....... 
அதீத.... 
அற்புதமான.... 
அபூர்வ..... 
அமுதே.....
அன்னையின்..... 
அனுமதியோடும்... 
அயலவரின்....  அரவணைப்போடும்... 
அம்மனின்.... 
அலங்காரமாய்.... 
அவையில்.... 
அமர்ந்திருப்பவளே....
அன்னையானாய்..
அப்பனானேன்.... 
அருமையான.... 
அரவிந்தனை.... 
அவதரித்தாய்... 
அவனியில்....
அரண்மனை.....
அரசரானோம்.....
அன்பானவளின் 
அங்கம்.... 
அவதியாகி.... 
அசையாது.... 
அடங்கிட.... 
அல்லல்பட்டு... 
அமைதியானது.... 
அடிமடியில்.... 
அவ்வுயிர்.....

@

இலக்கியக்  கவிப்பேரரசு

 இனியவன்

இக்கவிதையில் காதல், திருமணம், குடும்பம், மரணம் என்பது ஒரு சொல்லைக் கொண்ட எழுதப்பட்டுள்ளது