இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 அக்டோபர், 2017

சென்ரியூ

சர்க்கரை விலையேற்றம்
சந்தோசப்படுகிறார்
சர்க்கரை நோயாளி
&
சென்ரியூ

வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஹைக்கூ இனியவன்

இனித்த சர்க்கரை
கசக்கிறது
விலையேற்றம்

$
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன் 

வியாழன், 19 அக்டோபர், 2017

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில்
வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது
தொட்டி மீன்

@@@

ஏழை கொடுத்த மனு
வரிசைப்படுத்தியிருக்கிறது
சவரக்கடை

@@@

நன்னீர்
விஷக்கிருமியாகியது
டெங்கு

@@@

அறுவடை செழித்தும்
வாழ்க்கை செழிக்கவில்லை
விவசாயக்கடன்

@@@

காட்டுக்கு ராஜா
என்ன தவறு செய்தாரோ
மிருக்ககாட்சி கூடத்தில் சிறை

@@@

கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செவ்வாய், 17 அக்டோபர், 2017

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்
--------------------------
பணம்
கருகிக்கிடக்கிறது
பட்டாசு

@@@

சந்தோசப்படுத்தி
சந்ததியை அழிக்கிறது
பட்டாசு

@@@

எங்களிலும்
பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள்
வெடிக்காத பட்டாசு

@@@

ஒவ்வொரு வீடும்
ஏவுகணை மையமாகிறது
ஈக்குபட்டாசு

@@@

மனதுக்குள்
பலவர்ணங்களுடன் வெடிக்கிறது
ஏழைவீட்டில் பட்டாசு

&
கவிப்புயல் இனியவன்

இனிய தீபதிருநாளின்

தீப திரு நாளில்......
தீய எண்ணத்த எரித்துவிடு.....
தீய செயலை தூக்கியெறி......
தீய பார்வையை மறைத்துவிடு.....
தீய பேச்சை துப்பியெறி......
தீய தொழிலை செய்யாதே......!

தீங்கு செய்வாரோடு சேராதே......
தீச்சொல் கூறி திரியாதே.......
தீயவை எல்லாம் ஒழித்துவிடு.......
தீப காந்திகல்போல் வாழ்........
தீம் சொல்லால் பேசு..........
தீரம் கொண்டசெயல் செய்.....
தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....!

&
இனிய
இனிப்பான
இனிய தீபதிருநாளின்
இனியவனின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

உன் அழைப்புக்காய்.....!

நீ....
காதலை....
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!

மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!

எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 16 அக்டோபர், 2017

பிரம்ம முகூர்த்த

பிரம்ம முகூர்த்த நேரம்
ஒலித்தது ஆலயமணி ஓசை
கவலையோடு கோபுர புறா

&
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூ  தொடர் 

உன் காதல் வேண்டும் .....!

கனவிலும் .........
நினைவாலும் ......
கொல்வது  போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!

என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக  பட்சகோரிக்கை .....
நீயே  வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்  

ஆண் மரங்கள்.....

ஒரு......
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!

கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!

&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

கானா பாடல் - சென்ரியூ

கானா பாடல் - சென்ரியூ
--------------------------------
சின்ன வீடு சித்திரா
பெரிய வீடு கட்டுறா
மனைவி விவாகரத்து

வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
--------------------------------------------------
மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)

கவிப்புயலின் ஹைக்கூக்கள்
--------------------------------------------

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை
கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு
அடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.



^^^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்


" குடும்ப தலைவர் மரணம் " வழமையான ஒரு நிகழ்வு "ஒன்பது பிள்ளைகளும் ஓலம் " இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. " "கருத்தடை செய்த நாய் சாபம் " தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.

மேலும் தொடரும்.........................

புதன், 11 அக்டோபர், 2017

தகவல் அறியும் சட்டத்தின்......

தகவல் அறியும் சட்டத்தின்......
மூலம்  கேட்கப்போகிறேன்......
நீ என்னை காதலிக்கிறாயா....?

தேச வழமை சட்டத்தில்...
உன்னை கைது செய்ய முடியது.....
தேக வழமை சட்டம் இருந்தால்.....
உன்னை கைதுசெய்யனும்......
இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

இனியவனின் கலவை கவிதைகள்

இனியவனின் கலவை கவிதைகள்
----------------------------------------------
1) ஒரு ஹைக்கூ
-------------------------
ஐம்பதில் முதுகு கூனவேண்டும்
இருபதில் முதுகு கூனுகிறது
மூடைசுமக்கும் தொழிலாளி
-------------------
2) ஒரு சென்றியூ (நகைச்சுவை ஹைக்கூ)
-------------------------
அம்மா வயிற்றில் போட்டார்
ஆசிரியர் புத்தகத்தில் போட்டார்
முட்டை
------------------
3) ஒரு ஹைபுன்
------------------------
காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல்
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது ...

^
பள்ளி காதல் தொடரும்
பள்ளிவரை இல்லை
பள்ளி படலைவரை

-----------------------------

4) ஒரு பழமொன்ரியு
-------------------------------
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான்
குடிகாரன்

----------------------

5) ஒரு  லிமரைக்கூ
---------------------------
ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி
கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு
இழைத்து போனது உடல் ஒல்லி

----------------------------
6) ஒரு மைக்ரோ கவிதைகள்
----------------------
பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்.....
என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!

---------------
7) ஒரு அணுக்கவிதைகள்..!!!
---------------
மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌
என் இதயம்....!!
----------

8) கானா கவிதை
-----------------------
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குதுகால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குதுகைப்பை எங்கே ...?

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
உன் முகம் எங்கே .....?
முகம் இருக்குது அழகு எங்கே ..?

----------------
9) ஒரு தலைக்காதல் கவிதை
------------------------------

நல்லவேளை .....
உன்னை ஒருதலையாக ....
காதலித்தேன் .....
நீ காதலனோடு வந்து ....
நலம் விசாரித்தபோது .....
உதடு சிரித்தது ....
இதயம் கண்ணீர் விட்டது ....!!!

போகட்டும் விட்டுவிடு .....
எனக்கென்ன தோல்வியென்ன ....?
புதிதா ...?
நல்லவேளை உயிரே ....
உனக்கு வேதனையில்லை ...
அதுபோதும் என் காதலுக்கு ....!!!
---------------------------------
10) ஒரு காதல் கஸல் கவிதை
---------------------------------

என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!

காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!

உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!

---------------------
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
-------------இனியவன் --------------------

சனி, 7 அக்டோபர், 2017

காற்றுள்ள போதே தூற்றிவிடு...

 நீந்த மறந்த மீன்கள்
----------------------------
வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை........

தவறவிட்டஒவ்வொருவனும்.......
நீந்த மறந்த மீன்களே.......
பறவையின் வாயில் அகப்பட்ட......
மீனைப்போல் துடிக்கிறான்.......!

இளமைப்பருவத்தில்கல்வியை.......
கற்க தவறியவன் வாழ்க்கை......
காலத்தில் வறுமையோடு.......
பறவையின் வாயில் அகப்பட்ட......
மீனைப்போல் துடிக்கிறான்.......! 

பெற்றோரை காக்கவேண்டிய......
காலத்தை தவறவிட்டவன்.......
இறந்தவுடன் அவர் நினைவால்.......
துவண்டு கருகிப்போய்.....
நாள்தோறும் துடிக்கிறான்.........!

முதுமை காலத்துக்காய்.......
சேமிக்க தவறியவன்.......
கண்ணீர் கதையுடன்.....
அனாதை இல்லத்தில்.........
ஆயுளை முடிக்கிறான்........!

காற்றுள்ள போதே தூற்றிவிடு......
நீந்தும் சந்தர்ப்பத்தில் நீந்திவிடு.....!

&
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்

உன்னிடம் தொலைந்தேன்..
உணர்வுகளை பகிர்ந்தேன்..
உன் வரவு குறைந்ததால்.....
உயிரற்ற உடலானேன்....!

என்னை மறந்ததேன்.....
கல் சிலையாக்கியதேன்....
கண்ணெதிரே வரமறுத்தால்....
கல்லறையில் சந்திப்போம்....!

&
கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள் - 11

பல கோடி தர்மம்.....
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!

வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!

உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!

&
சமுதாய கஸல் கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்  

வியாழன், 5 அக்டோபர், 2017

சமுதாய கஸல் கவிதை 10

சமுதாய கஸல் கவிதை
---------------------------------

விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!

நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!

விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

புதன், 4 அக்டோபர், 2017

கொப்புபாயும் குரங்கு

கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!

கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!

கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

சமுதாய கஸல் கவிதை 07

எங்களை சுத்தமாக்கி.....
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!

என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!

காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

கையசைத்தேன் கண்ணசைத்தாள் (கை)

கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!

கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!

கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!

கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

சமுதாய விழிப்புணர்வு கவிதை

எத்தனையோ......
கடவுளின் உருவங்கள்.....
அத்தனையையும் அழகாக.....
சிலையாக வடித்துவிட்டான்.....
மனிதன்..........!

இத்தனை கடவுளை வடித்த.......
மனிதனால் ஒரு மனிதனை......
இனங்கான முடியவில்லை.......
அவனுக்கொரு சிலையை.......
வடிக்க முடியவில்லை.......?

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
சமுதாய விழிப்புணர்வு கவிதை

என்னவளை கண்டுபிடி.....!

என்
மூச்சோடு மூச்சாய்......
இருந்தவளை காணவில்லை....
என் மூச்சு காற்றே.....
என்னவளை கண்டுபிடி.....!

எப்படி
அவளை கண்டுபிடிப்பேன்.....
என்று அஞ்சாதே மூச்சே......
இந்த பிரபஞ்சத்தில்.......
என்னவளின்
மூச்சு கண்ணீரோடு.......
கண்ணீரோடு கலந்திருக்கும்....!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்