❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014
நிச்சயம் வதைக்கும் தானே உயிரே
உன் நினைவால் நான்
வதைபடுகிறேன்
என் கவிதைகள் உன்னை
வதைக்கிறது என்கிறாய்
நிச்சயம் வதைக்கும்
தானே உயிரே
உன் முறைத்த பார்வை
தயவு செய்து என்னை பார்த்து
சிரித்து விடு
உன் ஒரு நொடி சிரிப்பு
என்னை ஆயுள் முழுதும்
வாழவைக்கும்
உன் முறைத்த பார்வை
வேண்டாம் அன்பே
ஒரு நொடியில் இறந்து
விடுவேன்
தேசிய மொழியானது....!!!
உன்னை கண்டவுடன் ஏதோ
சொல்ல துடித்தது மனசு
நீ பார்த்த நொடியில்
வார்த்தைகள் இறந்து விட்டன ....!!!
மௌனம் தான் காதல்
தேசிய மொழியானது....!!!
உருகிய பனியானேன்
நீ வருகிறாய் என்றவுடன்
அந்த நொடி உரை பனியானேன்
வந்தவுடன் அந்தநொடியே
உருகிய பனியானேன்
பறந்து விடுவதற்கு ...!!!
நிச்சயம் நீயும் நானும்
இணையப்போவது இல்லை
வா அன்பே -இறைவனிடம்
வரம் கேட்போம் -இரண்டு
சிறகுகள் தா என்று
இந்த உலகை விட்டு
பறந்து விடுவதற்கு ...!!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)