இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஏப்ரல், 2017

தரிசனத்துக்காககாத்திருக்கிறேன்

உன்னை.....
ஓவியமாய் வரைய.....
துரிகையை எடுக்கிறேன்....
வெட்கப்படுகிறது....
இளமை அழகைபார்த்து....!

நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!

நீ ஆடையை உலத்த.....
கொடியில் போட்டிருப்பது....
உன் ஆடைகள் அல்ல.....
மேனியின் மெல்லிய தோல்....!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05

அழகின் மந்திரவாதி நீ.....!

காதல் .....
ஒரு ஆள் கொல்லி விஷம்.....
தலைக்கு ஏறினால்......
இறங்காது................!

நீ.....
மொட்டு அருகில் வந்தால்....
பூக்களாய் மலர்கிறது......
காய்கள் அருகே வந்தால்......
கனிகளாய் மாறுகிறது.....
அழகின் மந்திரவாதி நீ.....!

பிறர் வெளிச்சுவாசம்.....
மற்றவர்களுக்கு நஞ்சு.....
உன் வெளிச்சுவாசம்.....
எனக்கு அமிர்தம்......!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

விலகி செல்கிறாய்.........!

உன்னை
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!

முள் மேல் விழுந்த....
சேலையாய் கிழிகிறேன்....
நீயோ கண்ணடியின்.....
விம்பம் போல் வலிக்காமல்.....
பார்த்தும் பார்க்காதது போல்.....
விலகி செல்கிறாய்.........!

நீ
நடந்து வரும் பாதையில்....
மிதிபட்ட புல் எல்லாம்.....
பூக்களாய் மலர்கிறது..........!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்.........
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!

உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

வியாழன், 13 ஏப்ரல், 2017

நேசமுடன் ஹாசிம்

கவிப்புயல் இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்
கவிப்புயல் இனியவன் - இது நீங்கள் தான் எனக்கு அளித்த பட்டம்  100 சதவீத சந்தோசம் 
எனக்கு நிறைய புனை பெயர்கள் தந்தார்கள் . சொல்லவே நேரம் போதாது அந்த்தனை 
புனை பெயர்கள் அதில் எனக்கு பிடித்ததை நானே எடுத்தது கவிப்புயல் . என்றும் இனி இந்த 
புனை பெயரை விடேன் . அன்று இன்னொரு சந்தரப்த்தில் நண்பன் அவர்களுக்கும் ஒரு இடத்தில் 
பின்னூட்டலில் சொன்னேன் பலர் எனக்கு பல புனைபெயர்கள் தந்தாலும் . சேனை தந்த கவிபுயலே 
எனக்கு பிடித்தது என்றேன்.

என் பணிசுமை கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட பின் தள்ளிவிடுகிறது .புத்தகம் வெளியிடும் போது
சேனையின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுவேன் 
நன்றி நன்றி
நிச்சயமாக கலந்து கொள்வேன் எதிர்வருகின்ற 7ம் திகதி நாடு வருகிறேன் காலம் கைகொடுத்தால் சந்திப்போம் நானும் உங்களது நிலையில்தான் புத்தக வெளியீடு ஒன்றை தயார் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் கடந்து விட்டது அண்ணா காலமும் எனது பயணங்களும் தான் என்னை தூரமாக்கிக்கொண்டிருக்கிறது எதிர்வரும் வருடம் செப்தம்பர் மாதமளவில் எனது அடுத்த விடுமுறையினை தயார் செய்து அதில் புத்தக வெளியீடு ஒன்றினை செய்ய திட்டமிட்டுள்ளேன் அதை உங்களிடம்தான் முதலிலும் எத்திவைத்துள்ளேன் கண்டிப்பாக உங்ளை அழைப்பேன் கலந்து கொள்ள சித்தமாக இருங்கள் 

உங்களது புனைப்பெயரில் மிகவும் மகிழ்ந்தேன் அண்மையில் சில தளங்களை எட்டிப்பார்த்தேன் அங்கெல்லாம் கவிப்புயல் இனியவன் என்று கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பெருமைப்பட்டேன் 

கண்டிப்பா இதே நட்புடனும் பாசத்துடனும் எம் எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வோம் தமிழ் எமக்கு நேரிய பாலமமைத்திருக்கிறது அதில் சக கலைஞர்களாய் நாம் அனைவரும் பயணிக்கிறொம் என்பது மிக்க மகிழ்ச்சி அவற்றுக்கு ஏதுவாக எம் சேனைத் தமிழ் உலா கைகொடுத்தது நன்றிகள்