இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 6 மே, 2017

நீ இல்லையேல் கவிதையில்லை 02

கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!

என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!

நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை 02 

வியாழன், 4 மே, 2017

நீ இல்லையேல் கவிதையில்லை

நீ இல்லையேல் கவிதையில்லை
-------------------------------
ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!

அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் சொன்ன வார்த்தையே.....!

என் கவிதையை ...
ரசித்து விட்டு சொன்னாள்.....
இத்தனை கவிதையை......
எழுதிய உன் கையில்.......
முத்தமிட்ட ஆசை......!

அவளுக்கு புரியவில்லை.....
அவள் இல்லையேல் எனக்கு......
கவிதையே இல்லை............!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை

ஆன்மீக கவிதை

ஒரு ஜீவன் .....
வதைக்கபடும் போது .....
உன் உயிரும் வதை படனும் ......
அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!

படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!

எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு  விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை‍ _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!

அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!

&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன் 

புதன், 3 மே, 2017

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 2 மே, 2017

அம்மா

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................அம்மா........................!!!

எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^

அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^

உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!

^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!

^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!


@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்