இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 மே, 2017

நான் எழுதுவது கவிதை இல்லை

நான் எழுதுவது கவிதை இல்லை
-----------------------------------------------

கண்டதையும் கேட்டதையும்....
கண்டபடி கிறுக்குகிறேன்.......
யார் சொன்னது நான்...............
எழுதுவது கவிதை என்று ....?

பயணம் பல செல்கிறேன்.....
பயணத்தில் பல பார்க்கிறேன்.....
பட்டதை  பார்த்த அனுபவத்தை.......
வாழ்க்கை கவிதை  தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்......
யார் சொன்னது நான்........
எழுதுவது கவிதை என்று ....?


மரம் வெட்டும் போது......
மனதில் இரத்தம் வடியும்.......
எழும் என் உணர்வை......
சமுதாய கவிதை  தலைப்பில்......
கண்டபடி கிறுக்குகிறேன்.......
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?


அடிமாடாக அடித்து.....
அடுத்த வேளை உணவுக்கு......
அல்லல் படும் குடும்பங்களை.......
பார்ப்பேன் மனம் வருந்தும்....
பொருளாதார கவிதை தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்........
எழுதுவது கவிதை என்று ....?


காதோரம் கைபேசியை வைத்து.....
கண்ணாலும் சைகையாலும்......
தன்னை மறந்து கதைக்கும்.....
காதலரை பார்க்கிறேன்.......
காதல் கவிதை  தலைப்பில்....
கண்டபடி கிறுக்குகிறேன்.....
யார் சொன்னது நான்.......
எழுதுவது கவிதை என்று ....?

சின்ன வயதில் எல்லோருக்கும்.....
காதல் தோல்வி வரும் -அதை.....
மீட்டு பார்க்கும் போது உயிரே.....
வலிக்கும் .வந்த வலியை கொண்டு....
காதல் தோல்வி கவிதை  தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்.....
யார் சொன்னது நான்......
எழுதுவது கவிதை என்று ....?

நண்பர்களுடன் சிரிப்பேன்....
நலினமாக பேசுவார்கள்.....
நையாண்டியாக பேசுவர்.......
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு.....
நகைசுவை கவிதை தலைப்பில்......
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்......
எழுதுவது கவிதை என்று ....?

கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்...
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்....
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்....
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்....
யார் சொன்னது நான்.....
எழுதுவது கவிதை என்று ....?

சினிமாக்களில் மசாலாப்படம்....
சிலவேலைகளில் கருத்து படம்....
என் கவிதையும் இப்படித்தான்.....
மசாலாப்படம் கூடாததுமில்லை.....
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி ...
பெற்றுவிட்டது என்றும் இல்லை.....
படைப்புகள் மன இன்பத்துக்கே......
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!

நான் எழுதும் கவிதையே....
சிறந்தது என்று நினைப்பவன்....
நான் இல்லை - நான் அறிந்ததை....
அவன் அப்படி கேள்வி படுகிறான்....
என்று உணர்பவன் நான் என்பதால்....
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்....
எழுதுவது கவிதை என்று ....?

^^^
கவிப்புயல் இனியவன்
இக் கவிதை என் மீள் பதிவு

சனி, 27 மே, 2017

சின்ன சின்ன காதல் வரிகள்

சின்ன சின்ன காதல் வரிகள்
--------------

என்ன கொடுமை
பார்த்தாயா ......?
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு .......
பிரிந்து விட்டோம்
என்கிறோம்........!

^^^

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!

^^^

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!

^^^

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
 ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!

^^^

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!

^^^

கவிப்புயல் இனியவன்

அனைத்தையும் காதல் செய்கிறேன்

அனைத்தையும் காதல் செய்கிறேன்
----------------------------------------------

கோபப்படாமல் இருப்பதற்கு....!
வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....!

பொறாமைப்படாமல் இருப்பதற்கு...!
மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...!

உடல் நலத்தோடு இருப்பதற்கு...!
அமைதியோடு வாழ்வதற்கு...!

மகிழ்வோடு வாழ்வதற்கு...!
உழைத்து கொண்டே இருப்பதற்கு...!

அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...!
தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...!

எல்லாவற்றையும்காதலித்து கொண்டு .......
வாழ்வோமாக.......................!
காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......!

^^^
கவிப்புயல் இனியவன்
அனைத்தையும் காதல் செய்கிறேன்

வியாழன், 25 மே, 2017

நொடிதான் பார்த்தாள்....

கண்ணால் பேசி....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!

சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!

^^^
கவிப்புயல் இனியவன் 

புதன், 17 மே, 2017

காதல் தோல்வி

எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?

எதற்காக என்னை உனக்காய் ...
ஏங்க வைத்தாய் .....?

எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?

எதற்காக என்னை பிரிந்தாய் ...?

எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?

இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?

^^^^^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் "மன்னித்து"விடுவேன்
மறந்தால் "மரணித்து" விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்