இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 டிசம்பர், 2020

குடி குடியை கெடுக்கும்

 

குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!
@
​​​​​​​கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

கிறுக்கன்

 கிழக்கில் இருந்து ஆதவன் ....

கிழந்தெழும்பும் போதே ....

கிழம்பிவிடு... போராடு ....

கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!


கிரகதோசத்தை காரணம் காட்டி ....

கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...

கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....

கிரகபதி என்றும் நீதான் .....!!!


கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....

கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....

கிலியை முற்றாக அறுத்து எறி ......

கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!


கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....

கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....

கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......

கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே..... !!!

@

கவிப்புயல் இனியவன்

சனி, 19 டிசம்பர், 2020

சரயோகம்

 

 சரயோகம்.... 

உடலுக்கு ஆலய...

தரிசனத்துக்கு.... 

நிகரானது....... !!!

உயிருக்கு இறை 

தரிசனத்துக்கு..... 

நிகரானது....... !!!

@

கவிப்புயல் இனியவன்

வியாழன், 17 டிசம்பர், 2020

ஒருமுறை வருவாயோ ..?

 நிலவே ....
உன்னை உவமையாக கூறி ....
காதல் செய்தும் காதலரை ....
வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..?
உன்னையே உவமையாக கூறி ....
காதலியை ஏமாற்றிய ....
காதலனை சுட்டெரிக்க ....
ஒருமுறை வருவாயோ ..?

நிலவே உன்னிடம் ..
நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..?
தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....!
பூலோகத்திலோ உன்னால் ...
நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!!
நிலவே ஒருமுறை வருவாயோ ..
சூழலை மாசுபடுத்தும் இவர்களை ....
எச்சரிக்க மாட்டாயோ ...?

நிலாவில்
பாட்டி இருக்கிறார் ....
இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!!
பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ...
வான் வெளி தூசிகளே அவை ....
நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...?
மூடநம்பிக்கையை உடைத்தெறிய ...
ஒருமுறை இறங்கி வருவாயோ...?

மண்ணுலக நிலாதானடி

 காரிருள்
வானத்தில் பளிச்சிடும் நிலாவே ....
காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் ....
என்னவளின் வதனமும் .....
மண்ணுலக நிலாதானடி ....
விண் நிலவே - நீ தான் ....
என்னவளை படைத்தாயோ ....!!!

நீ படைத்த என்னவளோ ....
தரையில் உலாவரும் முழுநிலா .....
விண் நிலவே வந்துவிடாதே .....
வெட்கப்படுவாய் வேதனை படுவாய் ....
மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!

அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவை ....
அருகில் இருக்கும் அற்புதம் பார்த்தேன் ......
தேய்ந்து வளரும் வெண்ணிலாவை ....
தோளோடு சார்ந்திருக்கும் வரமும் பெற்றேன் ....
விண்ணுலக வெண்ணிலாவே .....
மண்ணுலக வெண்ணிலாவை .....
என்னவளாக தந்தமைக்கு நன்றி ....!!!