இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 ஜூலை, 2014

வேதனை படுகிறேன்

தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்

வெந்நீர் கடலாக ஓடுகிறது ....!!!

அழுது அழுது
கண் எரியவில்லை
உன் நினைவுகள் தான்
எரிக்கிறது

*************

நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!

வியாழன், 24 ஜூலை, 2014

விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!



விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!

காதலில் 
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம் 
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு 
பார்க்கும் அழகு அழகோ 
அழகு ......!!!

நேரே பார்க்க முடியாத 
வேளையில் விழியை 
ஓரமாக்கி பார்க்கும் அழகை 
தனக்குள்ளே 
நினைத்து சிரிக்கும் அழகு 
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!


திருக்குறள் : 1095

குறிப்பு அறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும்


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 15

காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!



காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!

என்னவளை பார்க்கும் 
வேளையில்
நிலத்தை நோக்கும் 
நெற் கதிர் போல் 
தலை குனிகிறாள் ....!!!

நான் அவளை பார்க்காத 
நேரம் பார்த்து என்னை 
பார்த்து வெட்கத்தில் 
தனக்குள்ளே தனியே 
சிரிக்கும் அந்த அழகு 
காதலில் கிடைக்கும் 
மற்றுமொரு சுகமடி .....!!!



திருக்குறள் : 1094

குறிப்பு அறிதல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 14

காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!



காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!

நான் 
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை 
பார்க்காமலும் 
நான் 
பார்க்காத போது அவள் 
என்னை பார்ப்பதும் என்ற 
பார்வை போட்டிதானடி ....?

நம் காதல் என்னும் 
பயிருக்கு நீ ஊரறிய 
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர் 
மட்டுமல்ல 
காதலை வளர்க்கும் 
பன்னீரும் உண்டு .....!!!


குறிப்பு அறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர்.

திருக்குறள் : 1093

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 13