இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஜூலை, 2014

காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!



காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!

என்னவளை பார்க்கும் 
வேளையில்
நிலத்தை நோக்கும் 
நெற் கதிர் போல் 
தலை குனிகிறாள் ....!!!

நான் அவளை பார்க்காத 
நேரம் பார்த்து என்னை 
பார்த்து வெட்கத்தில் 
தனக்குள்ளே தனியே 
சிரிக்கும் அந்த அழகு 
காதலில் கிடைக்கும் 
மற்றுமொரு சுகமடி .....!!!



திருக்குறள் : 1094

குறிப்பு அறிதல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக