இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஜூலை, 2014

காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!

காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!

என் 
காதலை என் பார்வையால் 
சொல்லிவிட்டேன் ....!!!
உன் 
காதலை உன் பார்வையால் 
சொல்லி விட்டாய் ....!!!
காதலை பரிமாற்றும் 
ஊடகம் பார்வைதானடி ...!!!

இதற்கு மேல் எதற்கு 
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும் 
உயிர் பரிமாற்றம் ...!!!


திருக்குறள் : 1100

குறிப்பு அறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக