இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஜூலை, 2014

இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!

இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!

நீ 
வேண்டுமென்றே திட்டுகிறாய் 
என்னை பிடிக்காதது போல் 
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய் 
அத்தனையும் பொய் உயிரே ...

மனம் முழுதும் நான் 
நிறைந்திருக்கிறேன் 
உன் நினைவு முழுதும் 
நானே இருக்கிறேன் 
என்னை 
யாருக்கும் விட்டு கொடுக்க 
விரும்பாத மனமே எதிரிபோல் 
பார்க்கும் காதலில் இதுவும் 
ஒரு உத்திதான் அன்பே ....!!!


திருக்குறள் : 1097

குறிப்பு அறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
உறா அர்போன்று உற்றார் குறிப்பு 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக