இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஜூலை, 2014

காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!



காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!

நான் 
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை 
பார்க்காமலும் 
நான் 
பார்க்காத போது அவள் 
என்னை பார்ப்பதும் என்ற 
பார்வை போட்டிதானடி ....?

நம் காதல் என்னும் 
பயிருக்கு நீ ஊரறிய 
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர் 
மட்டுமல்ல 
காதலை வளர்க்கும் 
பன்னீரும் உண்டு .....!!!


குறிப்பு அறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர்.

திருக்குறள் : 1093

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக