இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஜூலை, 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11



என் ஆதியும் அந்தமும் ....!!!

என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!


குறள் - 1091

குறிப்பு அறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக