பெண்ணெனும் ஓவியம்
.......
விரும்பிய கோடுகளால்
வரைவதே ஓவியம்//
விரும்பிய எண்ணத்தில்
ரசிப்பதே ஓவியம்//
என்னவள் கோடாகவும்
எண்ணமாகவும்
இருக்கிறாள்//
இறைவனின் படைப்பில்
விசித்திர படைப்பு//
நடமாடித் திரியும்
ஓவியம் நங்கைகள்//
ஓவியத்தின் அழகு
ராசிப்பவன் பார்வையில்//
ரசித்துப் பார்த்தால்
பெண் ஓவியம்//
சீண்டிப் பார்த்தால்
கிறுக்கல் சித்திரம்//
அழகான ஓவியத்தை
அலங்கோலம் ஆக்காதீர்//
வரைந்தவன்
வந்தாலும்
திருத்த முடியாது//
பெண் உயிரோவியம்
கிறுக்கினால் இறந்துவிடும் //
மதிப்போடு பார்த்தால்
வணங்கும் சாமி//
@
கவிப்புயல் இனியவன்
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 13 மார்ச், 2021
பெண்ணெனும் ஓவியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக