இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 மார்ச், 2021

பெண்மனம் ஒரு பூமனம்

 பெண்மனம்
ஒரு பூமனம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிறர் குழந்தைக்கும்
உணவூட்டும் குணம்//

பசியோடு அழும்
உயிருக்காக அழுவாள்//

தனக்கில்லாமல் உணவை
எளியோருக்கு  கொடுப்பாள் //

உறவுகளின் குற்றத்தை
தானாகவே   ஏற்பாள் //

கிள்ளிக் கொடுக்காமல்
அள்ளிக் கொடுப்பாள் //

கணவன் துவண்டால்
வாடி விடுவாள்//

தலைவனோடு துணைநின்று
தூங்காமல்  உழைப்பாள் //

பெரியோரை மதித்து
மகிழ்வோடு வாழ்வாள்//

குழந்தைப் பருவத்தில்
சகோதரத்தை காப்பாற்றுவாள் //

முழுவிழி தூங்காது
அரைவிழி தூங்குவாள் //

பூவைப்போல் மென்மை
கசங்கி போகமாட்டாள் //

பூமனத்தை கிள்ளினால்
 பூகம்பமாய்
 வெடிப்பாள் //

@

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக