இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஏப்ரல், 2017

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்

|||||||

விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது

IIIIII

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக